Monday, April 6, 2009

மனிதர்கள் இங்கே

தனித்தன்மை இல்லாத தரம்கெட்ட மனிதர்கள்;

சிந்துகிற ஒவ்வொரு சொல்லுக்கும் லாபம் எதிர் பார்க்கும் மனங்கள்;

சோறுக்காக பயப்படும் சாறு அற்ற உடல்கள்;

பணத்துக்காக மானத்தை நாசூக்காக விற்பவர்கள்;

தன்னைவிட எளியவரிடம் அதிகாரம் செலுத்தி சந்தோஷ படுபவர்கள்;

தன்னை விட வலியவரிடம் வளர்ப்பு நாயாய் அடங்கி விடுபவர்கள்;

புழுவாய் படைக்கப்பட்டு பரிணாமம் பெற்ற மனிதர்கள் இவர்கள்;

ஆடுகள் எல்லாம் கூடி சிங்கத்தை கேலி செய்யும் சமுதாய கோட்பாடுகள்;

தேடிசோறு நிதம் தின்று மறயபோகும் மடையர்கள்;

இதில், சாக்கடையில் விழுந்து விட்டோம் என வருத்தப்பட வேண்டாம் வைரங்களே.

காலம் வரும்.

உன் காலமும் வரும்.

No comments:

Post a Comment