Friday, August 21, 2009

தண்ணீர் ஊற்றியா வளர்த்தோம் இந்த பயிரை ?

என் தந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவிய இந்நாட்டில் ;
அதன் முந்தையர் ஆயிரம் ஆண்டு காலம் வாழ்ந்து சிறந்த இந்நாட்டில்;
இப்பொழுது,
சில பவுன் தங்கதிற்காக எத்தனையோ கன்னிகள் அடைந்து விடுகிறார்கள் முதுமையை.
அரை ஜான் வயிற்றிக்காக எத்தனயோ கண்ணகிகள் பங்கு போட்டுவிடுகிறார்கள் கட்டிலை.
ஒரு ரூபாய் புது பிளேடில் முடிந்து விடுகிறது எத்தனயோ குடும்பங்களின் தலைபிரசவம்.
நான்கு முழ கயிற்றில் முடிந்து விடுகிறது எத்தனயோ குடும்பங்களும் கூட.
காந்தியின் சுதத்திரம் கலவி கொள்வதிலும்,
நேதாஜி கற்பித்த வீரம்,
சாதி, மத, இன சண்டையிலும் கரைந்து கொண்டிருக்கிறது.
இங்கேதான், தொழில் நுட்ப வளர்ச்சி இமாலயத்திலும்,
கோயில்களின் வருமானம் கோடிகளிலும்.
வறுமைக்கும் செழுமைக்கும் கல்யாணம் நடப்பது எப்போது???
வாழ்க பாரதம் !!! வளர்க இந்தியா!!!