Monday, July 27, 2009

சுடும் உண்மை

கற்பு
மானம்
ஒழுக்கம்
கீதை
குரான்
பைபிள்
மனச்சாட்சி
அத்தனையும் மயிராச்சி
பெத்த குழந்தை வயிறு பசியில பத்தி எரியும் போது.

விதவை


தினம் தினம் என்னை சித்திரவதை செய்தாய்;
மனதாலும் உடலாலும் வேதனை தந்தாய்;
இன்று என்னோடு நீ இல்லை.
உன்னோடு வாழ்வதை விட;
என் கணவன் என்னும் உன் நினைவோடு;
வாழ்வது சுகமாய் இருக்கிறது.
தெரிந்தோ தெரியாமலோ நீ தந்த சில சந்தோசங்களை அசை போட்டுகொண்டே.