Thursday, February 5, 2009

மனசை பற்றிய நிலாரசிகனின் சிந்தனைகளும் அதற்கு எனது கருத்துரையும்

மனசை பற்றிய சில குறிப்புகளும்,கேள்விகளும்...
1.குரங்கின் பரிணாமம் மனிதனாக மாறியது.மனசை தவிர.
2.மனதிற்கு காயங்களை தந்துவிட்டு கண்ணீரை மட்டும் சிந்துகிறது விழிகள்.
3.உடலில் எங்கிருக்கிறது இந்த வெட்கம் கெட்ட மனசு?
4.ரசனைகளை நசுக்கும் கால்களின் பாதைகளிலும் பூக்கள் மலரவே வாழ்த்துகிற மனசை என்னசொல்லி திட்டுவது?
5.தவிர்த்தலை பரிசளிக்கும் இதயங்களை மறக்கும் மனசு எங்கே கிடைக்கும்?6.ஊனத்தை முன்நிறுத்தி நிராகரித்த வலி மறக்க தேவை மனமா,பணமா?7.உடைந்த கண்ணாடியில் ஓராயிரம் பிம்பங்கள். உடைந்த மனசில் ஒரே ஒரு பிம்பம்.
- நன்றி : நிலாரசிகன்

மேற்கண்ட நிலாரசிகனின் சிந்தனைக்கு எனது கருத்துரை கிழே: மனம் ஒரு கடவுள் !!!
பாம்பின் விஷத்திஇற்கு முறிவு பாம்பின் விஷமே!!!
காயங்களை ஏற்படுத்துவதும், அதற்க்கு மருந்திடுவதும் மனமே !!
மனம் என்ற ஒன்று இல்லாவிடில் இங்கே கவிஞன் இல்லை; காதல் இல்லை; காவியம் இல்லை; நீங்கள் இல்லை; நான் இல்லை.
தொட்டிலையும் கிள்ளிவிட்டு ; பிள்ளையையும் ஆட்டிவிடுவதே மனம்.
மனம் என் காதலி; காயபடுத்துவதும் அவளே!! சந்தோஷ படுத்துவதும் அவளே !!
எங்கும் நிறைந்திருந்தும் கண்ணால் காணமுடியாத கடவுளை போல;
என் உடல் எங்கும் நிறைந்திருந்து, கண்ணால் காண முடியாத மனமே!!
நீயும் கடவுள்தான் !!

No comments:

Post a Comment