Saturday, January 31, 2009

விடுதலை பத்திரிக்கை தலையங்கத்தில் வெளிவந்த கிழ்கண்ட கருத்தை கோடிட்டு காட்டிய தமிழ் காவியா அவர்களுக்கு எனது பதில்.

அன்புள்ள பகுத்தறிவுவாதிக்கு,
உங்கள் கடவுள் எதிர்ப்பு கருத்துகளை படித்தேன்.
ராம சேன அமைப்பினர் நடந்துகொண்ட விதம் கண்டிக்கதக்கதுதான்.
ஆனால் மனிதனின் செயலுக்கு கடவுளை இழுப்பது தவறு.
"முட்டைஇல் இருந்து கோழி வந்ததா; இல்லை கோழிஇல் இருந்து முட்டை வந்ததா " என்பது போல கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பது.
எந்த ஒரு நம்பிகையையும் அல்லது கருத்தையும் இல்லை என்பது எளிது. உண்டு என நிருபிப்பது கடினம். உருவ வழிபாடு வேண்டுமனாலும் நம்பக தன்மை இல்லாமல் இருந்த போதிலும்; ஒரு மேலான சக்தி உண்டு என்பதில் அனைவருக்கும் நம்பிகை உண்டு. அது புவிருப்பு விசையாக இருந்தாலும் சரி; எதுவகினாலும் சரி. உண்டு என நிருபிக்கும் வரை அல்லது குறைந்த பட்சம் உணரும் வரை, இல்லை என பேசுவது எளிது.
இங்கே உருவ வழிபாடு கூட மனதை ஓருமுக படுத்ததான். பெரியார் மூட நம்பிக்கைக்கு தான் எதிரியாக இருந்தார் என்பது என் கருத்து. கடவுள் என்னும் சக்திக்கு இல்லை. புராண படைபாளர்களை நீங்கள் விமர்சிக்க உரிமை உண்டு. ஆனால் அது கடவுளை விமர்சிப்பதாக எடுத்து கொள்ள முடியாது.
அன்புடன்,
ச. ராமானுசம்

இந்து மதக் கடவுள்களில் ஆபாசங்கள்தான் கொஞ்சமா? நஞ்சமா?

கலாச்சாரக் காவலர்களா இவர்கள்?
கருநாடக மாநிலம் மங்களூரில் அம்னீசியா லவுஞ்ச் ஹோம் என்ற உணவுவிடுதியிருக்கிறது. அந்த விடுதியில் ஆபாச நடனம் நடைபெறுகிறது என்று கூறிசிறீ ராமசேனா என்னும் இந்து மதவெறி அமைப்பினைச் (புரொமோத் முடாலிக்என்பவரைத் தலைமையாகக் கொண்டது) சேர்ந்த 40-க்கும் மேற்பட்டவர்கள்விடுதியின் உள்ளே புகுந்து பெண்களைக் கடுமையாகத் தாக்கியுள்ளனர்.அங்கிருந்த பெண்களிடமும் தவறாக நடந்து கொண்டுமிருக்கின்றனர்.
இந்த வன்முறை நடவடிக்கையைப் பெண்கள் அமைப்புகளும், பல்வேறு பொதுஅமைப்புகளும் வன்மையாகக் கண்டித்திருக்கின்றன.
இந்த அமைப்பு பாரதீய ஜனதாவிலிருந்து பிரிந்து தனியாக நடை போட்டாலும்அடிப்படையில் இந்துத்துவா பேசும் வெறியர்கள்தாம்.
மகாராட்டிரத்தில் சிவசேனா என்ற அமைப்பு எப்படி செயல்படுகிறதோ அதேபோலமாநில வெறி உணர்வோடும், இந்துத்துவா வெறியோடும் அனல் கக்கும் மதவெறிக்கும்பல் அது.
ஆபாசமாக நடனம் ஆடினார்கள் என்று சமாதானம் சொல்லக்கூடும்.அப்படியேயிருந்தாலும் சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு சண்டியர்த்தனம்செய்ய இவர்களுக்கு உரிமை ஏது? காவல்துறையிடம் புகார் கொடுத்து நடவடிக்கைஎடுக்கச் செய்திருக்கலாமே!
தீபா மேத்தா வாட்டர் என்ற திரைப்படம் எடுத்தபோதுகூட உத்தரப்பிரதேசத்தில்இந்துத்துவா கும்பல் உள்ளே புகுந்து ரகளையில் ஈடுபட்டு படப்பிடிப்புசம்பந்தமான அத்தனைக் கருவிகளையும் நாசப்படுத்தியதை நினைவுபடுத்திக்கொள்ளலாம்.
உ.பி.யிலிருந்து இடத்தை மாற்றி கொல்கத்தா செல்ல அவர்கள் திட்டமிட்டபோது,எங்கு சென்றாலும் கல்லால் அடிப்போம் என்று கத்திய காட்டுவிலங்காண்டிக்கூட்டம்தான் இது.
இதே கருநாடக மாநிலத்தில் பெங்களூருக்கு அருகே ஆனெகல் என்ற இடத்தில்சமுதாய நாடகக் குழுவினர் நாடகம் நடத்திக் கொண்டிருந்தபோது பெங்களூருமாநகராட்சி பா.ஜ.க. உறுப்பினர் எம். நாகராஜ் தலைமையில் காவிக் கும்பல்உள்ளே நுழைந்து கடுமையாகக் கலைஞர்களைத் தாக்கியதுண்டு (1.5.1999).
சென்னையில் பாரதியார் நினைவு இல்லத்தில் கவிதைத் திருவிழாநடத்தப்பட்டபோதும்கூட இந்து வெறியர்கள் தடிகளுடன் உள்ளே புகுந்துகவிஞர்களைத் தாக்கியதுடன் தந்தை பெரியார், லெனின், அண்ணல் அம்பேத்கர்ஆகியோரின் நூல்களைக் கிழித்து எறிந்தனரே! (1998 செப்டம்பர் 13).
பாசிஸ்டுகள் எப்பொழுதும் தங்களுக்கு எதிர்மறையான கலாச்சாரத்தை அனுமதிக்கவே மாட்டார்கள்.
ஆபாசத்தின்மீது அவர்களுக்கு உண்மையிலே வெறுப்பு இருக்குமானால், முதலில்இவர்கள் செல்லவேண்டிய இடம் உணவு விடுதிகள் அல்ல - நாடக அரங்குகளும் அல்ல.முதலில் இவர்கள் நுழையவேண்டிய இடம் இந்து மதக் கோயில்களுக்குள் - இந்துமதத்தின் தேர்களையெல்லாம் தீயிட்டுக் கொளுத்தவேண்டும், கோபுரங்களைஇடித்துத் தரைமட்ட மாக்கவேண்டும்.
கற்பனைக்கெட்டாத காட்டுவிலங்காண்டிகள் கூடக் கண்களை மூடிக்கொள்ளும்அளவுக்கு ஆண் - பெண் உறவுகளைக் கேவலப்படுத்தும் சிற்பங்கள், சித்திரங்கள்அங்கெல்லாம் பச்சைப் பச்சையாகத் தீட்டப்பட்டு இருக்க வில்லையா?
கம்ப இராமாயணத்தில் சீதையின் உடலை கம்பன் வருணித்ததுபோல வேறு யாராவதுவருணித்தது உண்டா?
இந்து மதக் கடவுள்களில் ஆபாசங்கள்தான் கொஞ்சமா? நஞ்சமா? பார்வதிக்கும்,சிவனுக்கும் நடந்த கல்யாணத்தில்கூட புரோகிதனாகயிருந்த பிரம்மா,பார்வதியின் தொடையைப் பார்த்து இந்திரியம் கசிந்தான் என்பதைவிடக் கேவலம்வேறு எங்கு உண்டு?
தம் முதுகு நிறைய அழுக்குகளை மூட்டை மூட்டையாகச் சுமந்து கொண்டு,அடுத்தவன் நகத்தில் அழுக்கு என்று ஆர்ப்பாட்டம் போடுவது யாரை ஏமாற்ற?
வன்முறைமூலம் எதையும் சாதிக்கலாம் என்பது எப்பொழுதும் அவர்கள் கைவசம்வைத்திருக்கும் வழிமுறை யாகும். அதுவும் அவர்களின் ஆட்சி நடக்குமேயானால்,காவல் துறையே இவர்களாக மாறி ஆடாத ஆட்டமெல்லாம் ஆடித்தீர்த்துவிடுவார்கள்.
கருநாடக மாநிலக் காவல்துறை 17 பேர்களைக் கைது செய்துள்ளது உண்மைதான்என்றாலும், பொது மக்களின் கண்களில் மண்ணைத் தூவும் சித்து விளையாட்டாகஅது இருக்கக் கூடாது. உரிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து உண்மையானமுறையில் வழக்கை நடத்தவேண்டியது அவசியமாகும்.
-----------------------நன்றி:-"விடுதலை" தலையங்கம்- 27-1-2009

No comments:

Post a Comment