Thursday, February 5, 2009

என் காதலின் தாயே!!!

பெளர்ணமி இரவில் வானம் பார்த்தால்;
நிலவுக்கு பதில் அங்கே உன் முகம்.
அமாவாசை இரவில் வானம் பார்த்தால்;
லட்ச்சகணக்காக உன் முகங்கள் நட்சத்திரங்களுக்கு பதிலாக.
உன் நினைவு சித்திரவதையால்,
நீருக்கடியில் கண்மூடி நான் இருந்தாலும்;
உன் கொலுசொலி செவிவழியே இதயம் பாய்கிறது.
முழித்து கொண்டிருந்தால் நீ என் உயிரை குடித்து விடுவாய்யென;
தூங்க சென்றால்,
நீ என் உயிருடனையே அமிழ்ந்து விடுகிறாய்.
மூன்று முறை கோயில் பிரகாரம் சுற்ற நினைத்த போதெல்லாம்;
தீடிரென குறுக்கிட்ட உன் நினைவு,
1003 ஆக முடித்து வைத்திருக்கிறது பலமுறை..

உன் நினைவெனும் உலகத்தில் தனியாளாக நான் உலாவி கொண்டிருந்தாலும்,
என்னை மனநலம் பாதிக்கப்பட்டவன் என்கிறது உலகம்.
இருந்தாலும் உன்னிடம்,
என் காதலை சொல்ல வந்த போதெல்லாம்;
என் தைரியம் கண்ணுகெட்டாத தூரம் போய்விடுகிறது.
நம் காதலில் கருவுற்று புதிதாய் பிறந்த குழந்தை நான்.
என் முகம் பார்த்தே எனது காதல்பசியை தீர்த்துவிடு
என் காதலின் தாயே!!!

No comments:

Post a Comment