Sunday, January 10, 2010

எங்க பாட்டி செத்து போச்சி !!!


நள்ளிரவு தூக்கத்தை கெடுக்கும் அந்த வறட்டு இருமல் இப்பொழுது இல்லை.

அதிகாலையில் பிடிவாதமாய் அருகே அமர்ந்து தூக்கத்தை கெடுக்கும் தொந்தரவு இல்லை இப்பொழுது.

திண்ணையில் கூட்டம் சேர்த்து அரட்டை அடிக்கும் சத்தம் இல்லை.

வாசலை தாண்டும் ஒவ்வொரு முறையும் பதில் சொல்ல வேண்டிய அவசியம்மில்லை.

பாசத்தை காட்டுவதில் அம்மாவுக்கு போட்டி இல்லை இப்பொழுது.

இளமையாக பேசும் பொழுது அச்சத்துடன் குரலை தாழ்த்த வேண்டிய அவசியம்மில்லை.

பாட்டியை சாக்காய் வைத்து இனி சொந்தகரர்களின் தொந்தரவு இல்லை.

தப்பை தேடி தேடி கண்டு ஏசும் வார்த்தைகள் இல்லை.

ஆனால்,

அவளது பிணத்தை அன்று வீட்டில் இருந்து எடுத்து சென்ற போது

சமையல் அறையில் இருந்து உப்பு தொலைந்து போனது போல் இருந்தது.

இப்பொழுது வாழக்கை சூடாகவும், மணமாகவும் இருந்தாலும்;

உப்பில்லா பண்டம் போல் சலிப்பாகவே உள்ளது .

காற்றின் ஓட்டத்தை குலைக்கும் புல்லாங்குழலின் ஒட்டையாய் அவளை நினைத்திருந்தாலும்;

அவள் இறந்து அதை அடைத்த பின்பு

வாழ்க்கை, சங்கீதம் எனும் பொக்கிசத்தை இழந்து

வெறும் அடுப்பு ஊதும் குழலாய் மாறிப்போனதை உணர ஆரம்பித்திருக்கிறோம் இப்பொழுது.

No comments:

Post a Comment