Wednesday, December 30, 2009

நாத்திக குழந்தைகள்

குழந்தை இயேசுவை கண்டு "பாப்பா" என்றும்;
சிவபெருமான் படம் பார்த்து "மாமா" என்றும்;
அடையாளம் காட்டியது என் நாத்திக குழந்தை.
அதட்டியவாறு அது ஆண்டவன் என்றேன் அதனிடம்.
அலட்டிக்கொள்லாமல் அம்மாவின் மடியில் படுத்துகொண்டது.
எனது அறிவு எழுந்து கொண்டது.
அணைத்து மதத்திலும் பிறக்கும் குழந்தைகள் நாத்திகர்௧ளே;
கலங்கிய மனிதர்களின் காற்று படாதவரை .
ஐயோ ! நாத்திக சமுதாயம் உறுவாக நான் காரணியாகி விடகூடாது.
குழந்தையின் நெற்றில் திருநீறு இட்டு கண்மூடி கடவுளை வணங்கி கொண்டேன் .
மீண்டும் என் அறிவு படுத்துவிட்டதா? காஞ்சிபுரம் பெருமாளுக்கே வெளிச்சம் .

6 comments:

  1. அருமையான கவிதை
    நல்ல வரிகள்
    நடையும் சிறப்பாக உள்ளது.
    பாராட்டுகள்
    வெற்றிபெற வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
  2. Thanks to Ramanan & Diya for your positive comments on my poem

    ReplyDelete
  3. மிக அருமை வெற்றிபெற வாழ்த்துகிறேன்

    ReplyDelete
  4. இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள் & வெற்றி பெற வாழ்த்துகள்

    ReplyDelete
  5. இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள் & வெற்றி பெற வாழ்த்துகள்

    ReplyDelete