Thursday, December 10, 2009

பறவையே எங்கு இருக்கிறாய் ?




என் மரத்தில்
நீ வசித்து சென்ற
௬டு மட்டும் தான் இப்பொழுது.
அதில் நீ உதிர்த்து சென்ற
வெண்பஞ்சு சிறகுகள்
மற்றும் எச்சங்களின் பாரம் தாங்காமல்
எப்பொழுது சரியுமோ?
என் மரம்.

ஆனால், உனது சாலையில்
எனது இரத்தகரைகள் மட்டுமே இப்பொழுது.
நீ கடந்து செல்லும் வேகத்தில் அதை பார்க்க௬ட
நேரமில்லை உனக்கு

மீண்டும் பின்னோக்கி பயணிக்க
கால இயந்திரம் இல்லை எனக்கு
இன்னமும் முன்னோக்கி சென்று சாவைதொட
கால சுதந்திரம் இல்லை எனக்கு
என்னோடு சேர்ந்துவாழ ஏனோ மனம் இல்லை உனக்கு.

இங்கே நானும்,
பறவை பிரிந்து சென்ற பறவை ௬டும்
ஏனோ இருந்து கொண்டு இருக்கிறோம்
பிறர் பார்வைக்கு.

1 comment: