Saturday, February 14, 2009

மீண்டும் ஒரு காதலர் தினம்...

"வேலை இல்லாதவருக்கு விடுமுறை தினம்" என்பது போல எனக்கு காதலர் தினம்.

எனக்கு காதலை பிடித்த அளவு பல காதலர்களை பிடிப்பதில்லை.
கடவுளை பிடித்த அளவு சாமியார்களை பிடிக்காதது போல.

நானும் இந்த சமுகத்தில் பிற காதலர்களை பார்த்திருக்கிறேன்.
நானும் காதலித்திருக்கிறேன். காதலித்து கொண்டிருக்கிறேன்.
காதலிக்கபட்டிருக்கிறேன். காதலிக்க பட்டுகொண்டிருக்கிறேன்.

ஆனால், இரு சக்கர வாகனத்தில் காதலனை குரங்கு போல் அப்பி கொண்டு தன் காதலை வெளி படுத்தும் காதலி.

வணிக வளாகங்களில் உதட்டை கடித்து கொண்டு, மிகவும் பெருமைக்குரிய இடமாய் தன் உடம்பில் அவள் கருதும் அந்த பாகங்களைத் தொட்டு தன் காதலை வெளி படுத்தும் காதலன்.

இவர்களை கண்டு, சில சமயம் பிறர் காதலை வெருத்திருக்கிறேன், ராம சேனா போல.
பின்பு பூசாரி மேல் கோபம் கொண்டு கடவுளை வெறுக்க கூடாது என்று தெளிவுட்றேன்.

என்னை பொறுத்த வரை அடக்கி வைக்கும் எதுவுமே, தன் வீரியத்தை பல மடங்கு பெருக்கும்.

அடக்கி வைத்த இதழ்கள் பூவாக மலரும்.
அடை காக்கப்படும் முட்டைகள் உயிராக வெளி வரும்.
அடக்கி வைத்த பாறைகள் எரிமலையாக வெடிக்கும்.
அடக்கி வைத்த காதல், கவிதையாக வெளி வரும்.
கவிதை மனிதனை மகாத்மாவாக்கும்.
மகாத்மா தன் காதலை கடவுள் ஆக்குவான்.

மன்னித்து விடுங்கள் நான் கிராமத்து காதலின் காதலன்.

2 comments:

  1. ஆதங்கம் புரிகிறது நண்பா.. நல்ல பதிவு.. காதலர் தின நல்வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  2. உண்மையான கருத்து நண்பரே

    காதல் என்று சொல்லி
    காதலை களங்கப்படுத்துகிறார்கள்.

    ReplyDelete