Thursday, February 5, 2009

வருவாயோ .....வாராயோ....

தெரியாத எண்ணில் இருந்து வரும் தொலைபேசி அழைப்பெல்லாம்;
மீண்டும் என் ஞாபகத்தில் நீ அழைப்பதாய் நினைக்க தோன்றும்.


வீட்டின் முன்பு கிடக்கும் அந்த அறிமுகமில்லாத செருப்பு;
என்னை தேடி நீ வந்துவிட்டதாய் நினைக்க தோன்றும்.


என் கனவினில் வந்த நமது திருமணம்;
நினைவிலும் நடந்து விடும் என நம்பிக்கையை கூட்டும்.


கண்மூடி நான் இருந்தால்,
கண்களில் நீருடன் என்னை நோக்கி நீ வருவதாய் பிரம்மை தோன்றும்.


உன்னிடம் இருந்து இதை நான் எதிர்பார்க்கவில்லை என்று கூறி,
நீ என்னிடம் இருந்து விலகிய தருணம் நினைத்தால்;
பிஞ்சில் வெம்பிய மாங்காய் வடுவாய் சுருங்கி விடும் என் இதயம்.


யார் சொன்னது " நான் காதலில் தோல்வி அடைந்தவன் " என்று.
காத்திருப்பேன் நான் இறக்கும் வரை.
இப்படியே நான் இறந்து விட்டால்;
அப்பொழுது எழுதிகொள்ளுங்கள் என் கல்லறையில்
"இவன் காதலில் தோல்வி அடைந்தவன் " என்று.

No comments:

Post a Comment