Showing posts with label புத்தகங்கள். Show all posts
Showing posts with label புத்தகங்கள். Show all posts

Wednesday, December 30, 2009

ஜென் தத்துவ விளக்க கதைகள்"


இந்த ஆண்டு பாலகுமாரனின் "காதலாகி கனிந்து" தவிர வேறு எந்த புத்தஹத்தையும் நான் முழுமையாய் படித்ததை எனக்கு தெரியவில்லை. வேறு எந்த சப்பை காரணமும் சொல்லி என்னை நானே ஏமாற்றிக்கொள்ள விரும்பவில்லை. ஏனெனில் நான் சாப்பிடாமல் இல்லையே? இதோ எடுத்துவிட்டேன் நர்மதா பதிப்பகம் வெளயிட்ட தேவ்நாத் எழுதிய "ஜென் தத்துவ விளக்க கதைகள்". தினமும் இரண்டு பக்கமாவது படித்து அதில் என்னை கவர்ந்த கருத்துகளை உங்களோடு பகிர்ந்து கொள்ள ஆசை படுகிறேன்.

ஆசிரியரின் முன்னுரை:

மனிதர்கள் மூன்று வகை:

1.இருட்டில் உழன்று அதையே பழக்கபடுத்தி கொண்டவர்கள்.

2.என்றேனும் வெளிச்சம் வராதா என்று காத்து கொண்டு இருப்பவர்கள்.

3.வெளிச்சத்தை நோக்கி நடப்பவர்கள்.

இம்முன்று வகையெனரும் இந்த புத்தகத்தின் மூலம் வெளிச்சத்தை பெறலாம் என்று முழுமையாக நம்பலாம்.

மேலும் ஒரு அருமையான கவிதை “தாமரை இலை தண்ணீர்” என்ற தலைப்பில்:

பிறவிக்கடலில் ஓடுகிறது
வாழ்க்கை படகு, அதில்
ஏற்றப்பட்ட சரக்குகள் இரண்டு
“உண்டு” “இல்லை”, ஆனால்
உடைந்து போன படகில்
இரண்டுமே ஒன்றுதான்.

(தொடருவோம்)